பாணந்துறை தெற்கு, பண்டாரகம வீதியில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் அப்பகுதியில் உள்ள ஒரு கடையை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், தற்போது கிடைத்த தகவலின்படி, துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் லேசான காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.