எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்களில் மேலும் இருவர், அமைப்பாளர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் அசோக சேபால தனது அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரொவபொத்தானை அமைப்பாளர் அனுர புத்திக்கவும் தனது அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதேவேளை, மாத்தளை பிரதான அமைப்பாளர் வசந்த அலுவிஹாரே, தம்புள்ள பிரதான அமைப்பாளர் சம்பிகா விஜேரத்ன மற்றும் ரத்தோட்டை தொகுதி அமைப்பாளர் ரஞ்ஜித் அலுவிஹாரே ஆகியோர் ராஜினாமா கடிதங்களை சனிக்கிழமை (24) அனுப்பிவைத்தமை குறிப்பிடத்தக்கது.