பொலிஸ்மா அதிபர் பதவித் தத்துவங்களை தேசபந்து தென்னக்கோன், பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு இன்று (19) முதல் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.
இதற்கமைய தேசபந்து தென்னக்கோன் இன்றைய தினம் முதல் தடவையாக குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.
இதற்கமைய இந்த விசாரணைக் குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்ற குழு அறை 8இல் கூடவுள்ளது.