தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள சில அரச ஊழியர்களுக்கு நாளைய தினம் (07) கடமை விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் அனைத்து அரச நிறுவனங்களதும் நியதிச்சட்ட சபைகளதும் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையொன்றை வௌியிட்டு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.