2019 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய போலி கருத்தடை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனின் மகள் சைனப், 2024 க.பொ.த உயர்தரத் தேர்வில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற பிறகு மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெற்றுள்ளார்.
வைத்தியர் ஷாஃபி சர்ச்சையின் போது குடும்பத்தினர் சந்தித்த கடுமையான பொது விமர்சனம் மற்றும் மன அழுத்தம் காரணமாக பாடசாலையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போதிலும், அவர் பாடசாலை பரீட்சாத்தியாக இல்லாமல் பிரத்தியோக பரீட்சாத்தியாக தோற்றி சாதித்து காட்டியுள்ளார்.
அவர் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 3 ‘ஏ’ பெறுபேறுகளை பெற்று, மாவட்ட அளவில் 12வது இடத்தையும், நாடாளாவிய ரீதியில் 357வது இடத்தையும் பெற்று, மருத்துவ பீடத்திற்கான தகுதியை பெற்றுள்ளார்.
முன்னதாக, அவர் க.பொ.த சாதாரண தர பரீட்சையில், 9 ‘ஏ’ பெற்றார். அதன் பின்னர் ஒரு நிகழ்வில் வைத்து உரையாற்றிய சைனப், மக்களுக்கு சேவை செய்ய தனது தந்தையைப் போல மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டிருந்த வைத்தியருக்கு விசாரணைகளில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் கிடைக்காததால், வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனுக்கு எதிரான வழக்கு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது.
அவரது மகள் சைனப்பின் சாதனை, மகத்தானது துன்பங்களை எதிர்கொண்ட அவரது விடாமுயற்சிக்கு சான்றாக நிற்கிறது. வாழ்த்துக்கள் சைனப் ஷாஃபி.