Date:

முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்தின் வருடாந்த இப்தார்

முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில், வருடாந்த இப்தார் நிகழ்வு புதன்கிழமை (26) திணைக்கள வளாகத்தில் இடம்பெற்றது.

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மேல் மாகாண கௌரவ ஆளுநர் ஹனீப் யூசுப், பிரதி சபாநாயகர் கௌரவ ரிஸ்வி சாலிஹ், தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முழப்பர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

பௌத்த, கிறிஸ்தவ, இந்து திணைக்களங்களின் பணிப்பாளர்கள் மற்றும் முன்னாள் பணிப்பாளர்கள், புத்த சாசன அமைச்சின் அதிகாரிகளும், இந்து, கிறிஸ்தவ திணைக்களத்தின் ஊழியர்கள்,பள்ளிவாசல் சம்மேளனங்களின் தலைவர்கள், சர்வ மதத் தலைவர்கள் என கலந்து கொண்டனர்.

திணைக்களத்தின் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும், விருந்தினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம் நவாஸ் வரவேற்புரையை நிகழ்த்தியதோடு, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் ஆகியோரும் உரையாற்றினர்.

மௌலவி இர்ஷாத் ஹுமைதி விசேட உரை ஆற்றினார். நன்றி உரை திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.என். பிர்னாஸ் நிகழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு இரண்டு நாட்கள்!

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை...

நிலவும் குளிரான காலநிலையில் பரவும் வைரஸ் நோய்கள்!

நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத்...

தங்க விலையில் இன்றும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில்...

புதிய 2,000 ரூபாய் நாணயத்தாளிலுள்ள அம்சங்கள்

நாட்டின் நடைமுறையிலுள்ள 2,000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை...