Date:

முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்தின் வருடாந்த இப்தார்

முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில், வருடாந்த இப்தார் நிகழ்வு புதன்கிழமை (26) திணைக்கள வளாகத்தில் இடம்பெற்றது.

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மேல் மாகாண கௌரவ ஆளுநர் ஹனீப் யூசுப், பிரதி சபாநாயகர் கௌரவ ரிஸ்வி சாலிஹ், தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முழப்பர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

பௌத்த, கிறிஸ்தவ, இந்து திணைக்களங்களின் பணிப்பாளர்கள் மற்றும் முன்னாள் பணிப்பாளர்கள், புத்த சாசன அமைச்சின் அதிகாரிகளும், இந்து, கிறிஸ்தவ திணைக்களத்தின் ஊழியர்கள்,பள்ளிவாசல் சம்மேளனங்களின் தலைவர்கள், சர்வ மதத் தலைவர்கள் என கலந்து கொண்டனர்.

திணைக்களத்தின் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும், விருந்தினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம் நவாஸ் வரவேற்புரையை நிகழ்த்தியதோடு, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் ஆகியோரும் உரையாற்றினர்.

மௌலவி இர்ஷாத் ஹுமைதி விசேட உரை ஆற்றினார். நன்றி உரை திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.என். பிர்னாஸ் நிகழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சற்று முன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்...

நீதிமன்றில் ஆஜராகத் தயார்! சட்டத்தரணி வன்னிநாயக்க அறிவிப்பு

பொலிஸாரால் கைது செய்வதற்காக தேடப்பட்டு வருவதாக கூறப்படும் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க,...

வட மாகாணத்தில் முஸ்லிம் மீள்குடியேற்றம் – ரிட் மனு தள்ளுபடி

வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக, 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (16) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்...