Date:

சுகாதார அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

அனுராதபுரம் சம்பவத்தைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள வைத்திய தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருமாறு சுகாதார அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு கோரிக்கை விடுத்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

36 மணி நேரத்திற்குள் சந்தேகநபரை நாங்கள் கைது செய்தோம். ஐந்து பொலிஸ் குழுக்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன. சந்தேக நபர் இருக்கும் பகுதி தொடர்பில் நேற்றிரவு எனக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, விசாரணைகள் நடத்தப்பட்ட பின்னர் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து இப்போது விசாரணைகள் நடந்து வருகின்றன.

ஒரு அரசாங்கமாக சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களிடம் கோரிக்கையை வைத்தோம். தயவுசெய்து பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்று, ஊடகங்களும் அந்தப் பொறுப்பை அதே வழியில் நிறைவேற்றின. அதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

எந்த ஊடகமும் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிடவில்லை. அவர்கள் தொடர்ந்து அவ்வாறு செய்வார்கள் என்று நம்புகிறேன்.

இன்று காலை நான் அனுராதபுரம் மருத்துவமனை வளாகத்தைச் சுற்றிப் பார்த்தேன். இந்த சம்பவத்தால் அங்குள்ள ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். எந்த பிரச்சனையும் இல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வழங்குவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

பாதுகாப்பு சேவையில் குறைபாடுகள் உள்ளன. அதைப் பற்றியும் கலந்துரையாடினோம். அனுராதபுரம் போன்ற பகுதிக்குச் செல்லும் வைத்தியர்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் ஒரு பெரிய தியாகத்தைச் செய்கிறார்கள். எனவே, எதிர்காலத்தில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று நம்புகிறோம்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய கொவிட் வைரஸின் தற்போதைய நிலை குறித்து சுகாதார அமைச்சு அறிக்கை

உலகம் முழுவதும் பரவி வரும் புதிய கொவிட் வைரஸ் தொடர்பான தற்போதைய...

தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழு நியமனம்

தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.   இளைஞர்...

நாத்தாண்டிய பிரதேச சபையில் பதற்றம்

நாத்தாண்டிய பிரதேச சபையின் ஆரம்ப அமர்வின் போது, ​​ஆளும் மற்றும் எதிர்க்கட்சி...

கொழும்பு மாநகரசபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளர் ரீஸா சரூக்! – முஜிபுர் ரஹ்மான்

கொழும்பு மாநகரசபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின்மேயர் வேட்பாளராக ரீஸா சரூக் தெரிவு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373