Date:

சிரியாவில் தொடரும் வன்முறை; 1000 பேர் பலி!

சிரியாவின் பாதுகாப்புப் படையினருக்கும், முன்னாள் ஜனாதிபதி அல் ஆசாதின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 1000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் நாட்டில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் முற்பட வேண்டுமென சிரியாவின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் ஒரு சிக்கலான சூழலில் நின்று கொண்டிருக்கிறோம். புதிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளோம். முன்னாள் ஆட்சியாளர்களுக்கு ஆதரவு தரும் அந்நியர்கள் புதிய கலவரத்தை உருவாக்கியுள்ளனர்.

நமது ஒற்றுமையை, ஸ்திரத்தன்மையைக் குலைக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். வன்முறைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

கலவரப் பின்னணி குறித்து முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

தேசிய ஒருமைப்பாட்டை நாம் பேண வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

எதிர்வரும் வியாழக்கிழமை (18) கொழும்பின் பல பகுதிகளில் 9 மணித்தியால நீர்...

கால் நூற்றாண்டு கடக்கும் அஷ்ரபின் மரணம் 

நினைவேந்தலுடன் நிறைவு பெறாமல் அடுத்த தலைமுறை நோக்கி நகர வேண்டிய அஷ்ரபின்...

தொழிற்சங்க போராட்டத்தை தீவிரமாக்கும் இலங்கை மின்சார பொறியியலாளர்கள்

  இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட...

ஹொரனை பேருந்து விபத்தில் 15 பேர் காயம்

ஹொரனை - இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில்...