Date:

சம்பியன்ஸ் கிண்ணம்: சம்பியனாகியது இந்தியா

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா சம்பியனாகியது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இன்று நடைபெற்ற நியூசிலாந்துடனான இறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே மூன்றாவது தடவையாக சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா சம்பியனாகியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, வருண் சக்கரவர்த்தி (2), குல்தீப் யாதவ் (2), இரவீந்திர ஜடேஜா, மொஹமட் ஷமியிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்த நிலையில் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் டரைல் மிற்செல்  63 (101), மிஷெல் பிறேஸ்வெல் ஆட்டமிழக்காமல் 53 (40), றஷின் றவீந்திர 37 (29), கிளென் பிலிப்ஸ் 34 (52) ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு 252 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, அணித்தலைவர் றோஹித் ஷர்மாவின் 76 (83), ஷ்ரேயாஸ் ஐயரின் 48 (62), லோகேஷ் ராகுலின் ஆட்டமிழக்காத 34 (33), ஷுப்மன் கில்லின் 31 (50), அக்ஸர் பட்டேலின் 29 (40) ஓட்டங்களோடு 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், பிறேஸ்வெல் 2, அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர் 2, றவீந்திர மற்றும் கைல் ஜேமிஸன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இப்போட்டியின் நாயகனாக ஷர்மா தெரிவானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புலனாய்வுத் தகவல் குறித்து வௌிப்படுத்திய ஜனாதிபதி!

முன்னதாக பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு இனவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது...

அருவக்காலு குப்பை திட்டத்துக்கு எதிரான புத்தளம் மாநகர சபையின் உறுதியான தீர்மானம்

புத்தளம் மாநகர சபையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், அருவக்காலு தின்மக்கழிவு செயற்திட்டத்திற்கு...

மீண்டும் அதிகரித்து செல்லும் தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தொடர்ந்தும் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் இன்றும்...