Date:

ஈஸ்டர் சூத்திரதாரியை எனக்கு தெரியும்: ஞானசார தேரர்

2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பின்னால் ஒரு மூளை இருப்பதாகவும், அவர் தொடர்பில் தனக்குத் தெரியும் என்று  கலகொட அத்தே ஞானசார தேரர் கூறினார்.

கண்டி தலதா மாளிகையில் ஆசீர்வாதம் பெற்று, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

“இங்கே ஒரு மூளையாக இருப்பதாக அவர்கள் சொன்னார்கள். நீங்கள் இப்போது மூளையாக இருப்பவர்களை தேடுகிறீர்களா? மூளையாக இருந்தவரை எனக்கு தெரியும் என்று நான் பொறுப்புடன் சொல்ல முடியும். ஆனால் நான் ஊடகங்களுக்கு சொல்ல மாட்டேன்.”

நாட்டின் ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு பொறுப்பில் உள்ளவர்களுக்கும் சொல்லுமாறு ஒரு ஊடகம் சொல்கிறது. ஒரு சூத்திரதாரி இருக்கிறான். எனக்குத் தெரியும், சூத்திரதாரி ரகசியம் தெரிந்துவிட்டது. மூளையாக செயல்பட்டவருக்கு அவர் எங்கிருந்தார் என்பது தெரியும். மூளையாக செயல்பட்டவரைச் சுற்றி இருந்தவர்களுக்கு தெரியும். சஹ்ரானுக்கு எப்படி பயிற்சி அளிப்பது என்பது மூளையாக செயல்பட்ட அவருக்குத் தெரியும். அவர் தற்கொலைக்கு எப்படி வழிநடத்தப்பட்டார் என்பது எனக்குத் தெரியும் என்றார்..

” அவர்களின் பெயர்கள் மற்றும் குடும்ப பெயர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொல்வேன் எனினும், அப்புஹாமி மற்றும் கருணாவதியிடம் சொல்வதில் பயனில்லை” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்

நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு...

அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள்...

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல்...