Date:

இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ராகுல் ட்ராவிட்

இருபது20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர், இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட் (Rahul Dravid) பதவியேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக தற்போது கடமையாற்றும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நிறையடையவுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட ராகுல் ட்ராவிட் இணக்கம் வெளியிட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு சபையின் அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடர்வரையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட ராகுல் ட்ராவிட் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பதவியை பொறுப்பேற்பது தொடர்பில் ராகுல் ட்ராவிட் ஆரம்பத்தில் தயக்கம் காட்டியுள்ளார்.

இந்நிலையில், ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியின்போது, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைத் தலைவர் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) மற்றும் செயலாளர் ஜே ஷா (Jay Shah) ஆகியோர், ராகுல் ட்ராவிட்டுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்க ராகுல் ட்ராவிட் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...

இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி...

2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள...

முதலாவது போட்டியில் போராடி வென்ற பாகிஸ்தான்

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது...