Date:

இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ராகுல் ட்ராவிட்

இருபது20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர், இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட் (Rahul Dravid) பதவியேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக தற்போது கடமையாற்றும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நிறையடையவுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட ராகுல் ட்ராவிட் இணக்கம் வெளியிட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு சபையின் அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடர்வரையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட ராகுல் ட்ராவிட் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பதவியை பொறுப்பேற்பது தொடர்பில் ராகுல் ட்ராவிட் ஆரம்பத்தில் தயக்கம் காட்டியுள்ளார்.

இந்நிலையில், ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியின்போது, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைத் தலைவர் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) மற்றும் செயலாளர் ஜே ஷா (Jay Shah) ஆகியோர், ராகுல் ட்ராவிட்டுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்க ராகுல் ட்ராவிட் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373