Date:

ஹபராதுவ பெண்ணின் படுக்கையறையில் ஆயுதங்கள்

காலி மாவட்டம் – ஹபராதுவ பகுதியில் பெண் ஒருவர் தனது வீட்டில் படுக்கையறையில் உள்ள கட்டில் மெத்தையில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வாள்களை மறைத்து வைத்திருந்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹபராதுவ ஹருமல்கொட, வெல்லகேவத்தை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருகுக் கிடைத்த தகவல் கிடைக்கபெற்றுள்ளது. இதனடிப்படையில், பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று குறித்த பெண்ணின் வீட்டைச் சோதனையிட்ட போது இந்த ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

உள்நாட்டுக் கைத்துப்பாக்கிகள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் இரண்டு வாள்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

NPP இன் கொழும்பு மாநகர சபை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

கொழும்பு மாநகர சபை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 58 வாக்குகள் எதிராக...

ஜோஹான் பெர்னாண்டோ விளக்கமறியலில்

பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்...

களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு

களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலைக்குள் இன்று (31) காலை துப்பாக்கிச் சூட்டுச்...

இன்று 75 மில்லி மீற்றர் மழை

வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று...