Date:

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

போப் பிரான்சிஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் நகரம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவிலுள்ள தன்னாட்சிப் பெற்ற நாடான வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க சபையின் திருத்தந்தையுமான பிரான்சிஸ் (வயது 88) கடந்த சில நாள்களாக சுவாசக்கோளாறு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

மேலும், அவரது உரைகளை படிப்பதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (பிப்.14) அவர் இத்தாலி தலைநகர் ரோமிலுள்ள கெமிளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சுவாசக்குழாய் அழற்சி (ப்ரொன்சிடிஸ்) நோயிக்கான சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வாடிகன் நகரம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மூட்டு மற்றும் இடுப்பு வலி, பெருங்குடல் வீக்கம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளினால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸுக்கு, ஹெர்னியா அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   இதன் வலிமை ரிக்டர்...

முன்னாள் முதலமைச்சர் ஒருவருக்கு கடூழிய சிறை தண்டனை

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட...

ஐ.தே.கட்சியின் உப தலைவராக மீண்டும் அகில விராஜ் காரியவசம் நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில...

மினுவாங்கொடையில் துப்பாக்கி சூடு

மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள வீதித் தடை ஒன்றில் போதைப் பொருட்களை சோதனை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373