Date:

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 12ஆம் திகதியன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும்.

இந்த கப்பல் சேவையானது செவ்வாய்கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் ஈடுபடும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நுகேகொட பேரணிக்கு திலித்திற்கு அழைப்பு

எதிர்க்கட்சிகளின் ஒரு பகுதியினர் இணைந்து எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் நடத்தவுள்ள...

323 கொள்கலன்கள் குறித்து விசாரிக்க பாராளுமன்றத் தெரிவுக்குழு

கட்டாய பௌதீக ஆய்வு இன்றி 323 கொள்கலன்களை விடுவித்தது குறித்து விசாரணை...

இரண்டு மலையக ரயில் சேவைகள் ரத்து

கொழும்பு கோட்டை மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையில் இயக்கப்படும் இரண்டு...

விசேட வைத்தியர்களுக்கான சட்ட வரைவைத் தயாரிக்கக் குழு

விசேட வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்டத்தை வரைவு செய்வதற்காக சுகாதார மற்றும்...