Date:

காலணிகளுடன் ஆலயத்துக்குள் பிரவேசித்த காவல்துறை உயரதிகாரி

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களுக்குள் காலணிகளுடன் பிரவேசித்த காவல்துறை அதிகாரியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

காங்கேசன்துறை வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரே இவ்வாறு ஆகம விதிகளை மீறி ஆலயங்களுக்குள் காலணிகளுடன் சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று நண்பகல் சென்ற காவல்துறைமா அதிபர் சி.டி.விக்ரமரத்ன வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் மற்றும் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குச் சென்று  வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் ஆலயங்களுக்கு வெளியில் காலணிகளைக் கழற்றிவிட்டு உள்ளே சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும், மேற்படி காவல்துறை அதிகாரி காலணிகளைக் கழற்றாது ஆலயங்களுக்குள் சென்ற விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று...

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு வாகனத்துடன் பறிமுதல்

மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு...

ஜனாதிபதி அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டம்பரில் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார், முதலில்...

தப்பிச் செல்ல முயன்ற வலஸ் கட்டா!

வலஸ் கட்டா என்ற திலின சம்பத் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு...