Date:

30, 000 மெட்ரிக் டன் சேதன பசளை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய, அரசாங்கத்தின் இரு நிறுவனங்களால் கொள்வனவு செய்யப்பட்ட 30, 000 மெட்ரிக் டன் சேதனப் பசளை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இம்முறை பெரும்போகத்துக்கு தேவையான சேதன பசளையை விநியோகிக்கும் வேலைத்திட்டம் இன்று (13) அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட அதேவேளை, இந்த நாடளாவிய வேலைத்திட்டத்துக்கமைவாகவே குறித்த சேதன பசளை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த சேதனப் பசளை கிடைத்தவுடன், ஏனைய மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான சேதனப் பசளையை, பற்றாக்குறையின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அண்மையில் விவசாய அமைச்சு அறிவித்திருந்தது.

சேதனப் பசளை பங்கீட்டின்போது, பெருமளவில் நெற் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, குருணாகல், புத்தளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு முன்னுாிமையளிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானுக்கு நெதர்லாந்து நிர்ணயித்த வெற்றி இலக்கு

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது...

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்ற திட்டம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம்...

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடர் இன்று இலங்கை இந்தியாவில் ஆரம்பம்..!

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று...

மட்டக்களப்பில் 3 ரொக்கட் லோஞ்சர்கள்…

மட்டக்களப்பு, குடும்பிமலைப் பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டுத் தயாரிப்பான...