Date:

வரலாற்றில் முதல் முறையாக பொலிஸ் நிலையங்களில் STF

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை தடுக்கும் நோக்கில் கொழும்பு நகரில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையே 7 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பதிவாகியுள்ளன.

தற்போதைய சூழ்நிலையில் துப்பாக்கிச் சூடுகளை தடுப்பதற்கு உதவி தேவைப்படுவதாக அடையாளம் காணப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு விசேட அதிரடிப் படையின் சிறிய குழுக்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  புத்திக மனதுங்க தெரிவித்தார்.

இருப்பினும், பொலிஸ் நிலையங்களுக்கு விசேட அதிரடிப் படையினரை அனுப்பப்படுவது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.

குற்றச் செயல்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகளில், பகல் மற்றும் இரவு நேரங்களில் அவசர வீதித் தடைகளை நிறுவுவதன் மூலம், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை நிறுத்துவதோடு, நடமாடும் ரோந்துப் பணிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போலி செய்திகளை பரப்புவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான...

“சிறையில் இம்ரான் உயிரோடு இருக்கிறார்”

​பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் அடிலா சிறை​யில் உயிருடன் இருக்​கிறார். அவரை...

வீடுகளைச் சுத்தம் செய்ய வீட்டுக்கு 10,000;விபரங்களுக்கு கிளிக் செய்யவும்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு, ஒரு வீட்டுக்கு 10,000 வழங்கப்படும்....