போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று காலை மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி அலுவலக ரயிலில் சாதாரண பயணியாக பயணித்துள்ளார்.
அமைச்சர் பயணிகளுடன் உரையாடும் புகைப்படங்கள் அடங்கிய சமூக ஊடகப் பதிவுகள், ரயில் பயணிகள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள் குறித்து அவர் விவாதத்தில் ஈடுபட்டதை வெளிப்படுத்தியது.
ஊடகங்களின் துணையின்றி நடத்தப்பட்ட இந்த அறிவிக்கப்படாத ஆய்வுப் பயணத்தின் போது, அடிக்கடி ரயில் தாமதம், மின் விசிறிகள் பழுதடைதல், மாற்றுத் திறனாளிகள் ரயில் ஏறும் போது ஏற்படும் சவால்கள், தண்டவாளங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள சுகாதாரமற்ற நிலை, பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தும் பாவனைக்கு பொருத்தமற்ற ரயில்கள் தொடர்ந்து பயன்படுத்துதல் போன்றவற்றைப் பற்றி பயணிகள் இதன்போது கவலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.