சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களைப் பயன்படுத்திப் பொருத்தப்பட்ட லொறியை வைத்திருந்த குற்றச்சாட்டில் பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பணிக்குழுவால் (PCTF) ஞாயிற்றுக்கிழமை (19) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
ரூ. 200,000 சொந்த பிணையில் அவரை விடுவிக்க நீதவான், அடுத்த விசாரணையை பிப்ரவரி 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
ஹப்புத்தளை – முத்துவானவத்தை தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு சொந்தமானது என்று கூறப்படும் லொறியும், கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.