Date:

வெளியேறுங்கள்- ஜனாதிபதி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களையும் அரசாங்கம் மீளப் பெற்றுக்கொள்ளும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தின் நிலத்தின் மதிப்பைத் தவிர்த்து மாதாந்த வாடகை ரூ. 4.6 மில்லியன் என்றார். முன்னாள் ஜனாதிபதிகள் குடியிருப்பை காலி செய்யவோ அல்லது வாடகையை தாங்களே செலுத்தவோ முடியுமென ஜனாதிபதி மேலும் கூறினார்.

“தற்போதுள்ள சட்டங்களின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு குடியிருப்பு அல்லது அவர்களது சம்பளத்தில் 1/3 பங்கு உரிமை உண்டு. அரசாங்கம் இப்போது இந்த நன்மையை ரூ. 30,000 ரொக்க கொடுப்பனவாக மட்டுப்படுத்தும். இது அவர்களின் சம்பளத்தில் 1/3 ஆகும்” என்று கட்டுகுருந்தவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகை தவிர்ந்த அனைத்து அமைச்சு பங்களாக்களும் ஹோட்டல் திட்டங்களுக்காக அல்லது வேறு பொருத்தமான பயன்பாட்டிற்காக மீளப் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் ஏற்கத் தயார் – பொன்சேகா

தற்போதைய அரசாங்கத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத்...

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் நாளை(15) முதல் ஏப்ரல்...

எதிர்க்கட்சித் தலைவரின் வாழ்த்து செய்தி

இலங்கையர்களின் சிறப்பான கலாசார விழாவான சிங்கள தமிழ் புத்தாண்டுக்காக எமது நாட்டின்...

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

வளமான நாடு, அழகான வாழ்க்கை”க்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட்டுவரும் இவ்வேளையில், மலரும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373