Date:

ஊடகவியலாளர் ரிஸ்கி ஷெரீப் காலமானார்

மாவனல்லையை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளரும்,கவிஞரும்,ஊடகவியலாளருமான ரிஸ்கி ஷெரீப் அவர்கள் தனது 54 ஆவது வயதில் 2025.01.10 ஆம் திகதி இரவு காலமானார்.

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகை ஆசிரியர் பீடத்தில் முன்னர் சேவையாற்றிய இவர்,தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் செந்தூரம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் சேவையாற்றியுள்ளார்.

அதிலிருந்து விஷேட ஓய்வு பெறல் திட்டத்தின் கீழ் தினகரனில் இருந்து ஓய்வுபெற்ற ரிஸ்கி ஷெரீப் அவர்கள் ஹெம்மாதகம வீதியில் “புக் மார்ட்” எனும் பெயரில் புத்தக விற்பனை நிலையமொன்றை நடாத்தி வந்தார்.

சிறிது காலம் சுகயீனமுற்றிருந்த இவர் மொஹமட் பஸால்,பாத்திமா ஆதிலா,பாத்திமா அகீலா ஆகியோரின் அன்பு தந்தையும், பாத்திமா பஸ்லியாவின் கணவரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று சனிக்கிழமை கிருங்கதெனிய மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளி வாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொடர் சிகிச்சையில் ரணில் விக்கிரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு...

பொரலஸ்கமுவவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் முச்சக்கர வண்டியில் வந்த இருவர் நடத்திய...

அர்ஜுன் மகேந்திரனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு...

முன்னாள் ஜனாதிபதி ரணில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,...