Date:

வீட்டுக்கு அருகே வந்த ’வெள்ளை வேன்’ : உயிருக்கு ஆபத்து

தனது வீட்டுக்கு அருகே அடையாளம் தெரியாத குழுவினர் வெள்ளை வேனில் வந்ததாகவும், அவர்களது சந்தேகத்துக்கிடமான நடத்தை உயிருக்கு ஆபத்தானது என்று கிருலப்பனை பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்தார்.

சந்தேகத்திற்கிடமான வெள்ளை வேன் தனது வீட்டின் பின்புறம் உள்ள வீதியில் கடந்த வியாழக்கிழமை காலை வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

வீட்டின் பின்பக்க வாசலுக்கு அருகே வாகனத்தில் இருந்து இறங்கிய ஒருவர், கேட்டில் பதிக்கப்பட்ட எண்ணை சரிபார்த்து, இதுதான் வீடு என்று கூறியதாகவும், பக்கத்து வீட்டுக்காரர் அதைப் பார்த்து தனக்கு தகவல் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு மாதத்திற்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முறைப்பாடு செய்த போதிலும், இதுவரை அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.   அதன்படி,...

மனம்பிடிய துப்பாக்கி சூடு – காரணம் வெளியானது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373