Date:

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி

வாக்குறுதியளித்தப்படி புதிய அரசியலமைப்பு, புதிய தேர்தல் முறை மாற்றம் என்பன கொண்டுவரப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற 72ஆவது இராணுவ வருட பூர்த்தி நிகழ்வில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கையூட்டல் மற்றும் மோசடி ஆகியனவற்றுக்கு இடமளிக்காது சகல அரச அதிகாரிகளும் பொதுமக்களுக்குச் சேவையாற்ற வேண்டும்.

முப்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் மன உறுதியை அதிகரிக்கச் செய்து, அவர்களுக்கான உத்தியோகபூர்வ அதிகாரங்களை முறையாக வழங்கி, தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்க, கடந்த இரண்டு வருடக்காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன், மீண்டும் பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதங்கள் ஏற்படாதவகையில் நாட்டைப் பாதுகாப்பதில் தாம் உறுதியுடன் உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும்.

அதிகளவான மக்கள் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளனர்.

அதனூடாக அதிகளவு அந்நியச் செலாவணி எமக்குக் கிடைக்கின்றது.

அதற்காகக் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

எதிர்வரும் வருடங்களில் நாட்டைச் சுபீட்சத்தை நோக்கிக் கொண்டு செல்வதற்கு, அனைவரதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை...

ஈரானில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா...

நாளை முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என...

அரச வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க புதிய நடைமுறை

அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக டிஜிட்டல் அட்டை (Digital...