Date:

விபத்தில் காயமடைந்த பல்கலை மாணவன் உயிரிழப்பு

வவுனியா குருமன்காடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த கொழும்பு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ரயில் நிலைய வீதி,
வைரவபுளியங்குளம், வவுனியாவைச் சேர்ந்த சந்திரபோஸ் ஸ்ரீகாந்தன் (வயது- 23) என்ற இறுதி ஆண்டு மாணவராவார்.

கடந்த 25 ஆம் திகதி நண்பர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானார்.

இதில் படுகாயம் அடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு இருந்த நிலையில் நேற்று முன்தினம்  செவ்வாய்க்கிழமை (31) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை வவுனியா பொலிஸார் நெறிப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யட்டியந்தோட்டை பட்ஜெட் தோற்றது

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள யட்டியந்தோட்டை பிரதேச சபையின் 2026...

இலங்கையில் உள்ள திருநங்கைகள் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் உள்ள திருநங்கை பாலியல் தொழிலாளர்களில் அல்லது திருநங்கைப் பாலியல் அடையாளத்தைக்...

ரணிலுக்கு எதிராக அதிக்குற்றச்சாட்டு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...

போதைப்பொருள் படகுடன் 6 பேர் கைது

இலங்கையின் தெற்கு கடற்கரையை அண்டிய கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும்...