Date:

அஷ்-ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானி அவர்கள் காத்தான்குடிக்கு விஜயம்..!!

(எஸ். சினீஸ் கான்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களது அழைப்பின் பேரில் சவூதி அரேபியாவில் புகழ்பெற்ற முக்கியமான இமாம்களில் ஒருவரான அஷ்ஷேய்க் காரி முகம்மது சஆத் நுமானி அவர்கள் காத்தான்குடிக்கு இன்று (27) வருகைதந்தார்.

காத்தான்குடி அல்-அக்ஸா பெரியபள்ளிவாயலில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் ஜும்ஆ பேருரை, தொழுகையினையும் நடத்தியதுடன் பல குரல்களில் அல்-குர்ஆனையும் ஓதிக்காட்டினார்.

அதனைத் தொடர்ந்து மஹ்ரிப் தொழுகையினை ஏறாவூர் பெரிய மீரா ஜும்ஆ பள்ளிவாயலிலும் இஷா தொழுகையினை வாழைச்சேனை முகைத்தீன் ஜும்ஆ பள்ளிவாசலிலும் நடத்திவைத்தார்.

அஷ்ஷேய்க் முகம்மது சஆத் நுமானி சவூதி அரேபியா மக்கா ஹரம் ஷரீபின் தலைமை இமாமான அஷ்ஷேய்க் சுதைஷ் அவர்களது குரல் உட்பட பல்வேறுபட்ட இமாம்களின் குரல்களில் புனித அல்குர்ஆன் வசனங்களை ஓதக்கூடிய சிறந்த “காரியாக” திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கயந்த கருணாதிலக்க இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

வாக்குமூலம் பெறுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இலஞ்சம் மற்றும் ஊழல்...

முட்டை விலை தொடர்பாக வெளியான அறிவிப்பு

பண்டிகைக் காலப்பகுதியில் முட்டையின் விலை அதிகரிக்கும் என சிலர் வௌியிடும் கருத்துக்களில்...

இலங்கைக்கு இரங்கல் தெரிவித்த பாப்பரசர்

திட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு பாப்பரசர் லியோ தனது...

பதுளையில் மேலும் 238 குடும்பங்கள் வௌியேற்றம்!

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்களைச் சேர்ந்த...