Date:

கலவான விபத்தில் இளைஞன் பலி

கலவான-வட்டரவ வீதி வம்பியகொட பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் கலவான அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை (26) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் கலவான குடுமிரிய பிரதேசத்தைச் சேர்ந்த ரம்பதிகே தினுல பன்சிலு என்ற 17 வயதுடைய இளைஞர் என கலவான பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் உறவினரும் தந்தையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெனிக் வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற ​பூப்புனித நீராட்டு  நிகழ்வொன்றில் கலந்து கொண்டு திரும்பி கொண்டிருந்த போதே  இந்த விபத்தில் சிக்கி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

‘டித்வா’ அனர்த்தம் | மாற்றுக் காணி வழங்கும் திட்டம்!

'டித்வா' புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக்...

50 மி.மீக்கும் அதிக மழை

இன்று (13) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல்...

அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது...

தோல்வி அடைந்த புத்தளம் மாநகர சபையின் முதல் வரவு செலவுத் திட்டம்!

புத்தளம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் இன்று...