Date:

கலவான விபத்தில் இளைஞன் பலி

கலவான-வட்டரவ வீதி வம்பியகொட பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் கலவான அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை (26) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் கலவான குடுமிரிய பிரதேசத்தைச் சேர்ந்த ரம்பதிகே தினுல பன்சிலு என்ற 17 வயதுடைய இளைஞர் என கலவான பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் உறவினரும் தந்தையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெனிக் வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற ​பூப்புனித நீராட்டு  நிகழ்வொன்றில் கலந்து கொண்டு திரும்பி கொண்டிருந்த போதே  இந்த விபத்தில் சிக்கி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் | அமைச்சரவை முடிவு தீர்மானம்!

கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பொருளியல் விஞ்ஞான வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம்...

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, ஒப்பிடுகையில், இலங்கையில்...

ஊவா மாகாண பாடசாலைகளுக்கு பூட்டு!

ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் காலவரையின்றி மூடப்படவுள்ளதாக ஊவா மாகாண...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு? | விசாரணை தேவை !

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சில வினாத்தாள்கள் கசிந்துள்ளதா என்பதை உறுதி செய்ய...