Date:

சாதனையை பாராட்டினார் ஹரின் பெர்னாண்டோ

இலங்கை 02 மில்லியன் சுற்றுலா பயணிகளின் வருகையை எட்டிய சாதனையை இலங்கையின் முன்னாள் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று பாராட்டியுள்ளார்.

2024 ஆம் ஆண்டிற்கு 02 மில்லியன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், அதிகாரிகளால் அதனை அடைய முடிந்துள்ளதாகவும் ஹரின் பெர்னாண்டோ தனது ‘X’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கம் நிர்ணயித்த 2025 ஆம் ஆண்டிற்கான 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் இலக்கை அரசாங்கம் அடைய முடியும் என்று அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

“2024 இல் நாங்கள் கணித்தது உண்மையாகிவிட்டது, கடின உழைப்பு பலனளித்தது, நாங்கள் பூஜ்ஜிய சுற்றுலாப் பயணிகளுடன் ஆரம்பித்தோம்.

இச்சாதனையில் பங்காற்றிய தொழில்துறை மற்றும் இலங்கை சுற்றுலா ஊழியர்களுக்கு பாராட்டுக்கள், 2025 ஆம் ஆண்டிற்கான யதார்த்தமான இலக்காக 2.5 மில்லியனை அடைய புதிய அரசாங்கம் நல்ல பணியை தொடர வாழ்த்துகிறேன் ” என ஹரின் பெர்னாண்டோ ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிரிழப்புகள் 390 ஆக அதிகரிப்பு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை...

தெல்தோட்டைக்கு வான்வழி (ஹெலிகொப்டர்) மூலம் உலர் உணவுப் பொருட்கள்!

இன்று ஜனாதிபதி மற்றும் மாகான ஆளுநர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெல்தோட்டை பற்றி...

பலியானோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை...