Date:

’’மேலதிக புகையிரத சேவைகளை மேற்கொள்ள முடியாது’’

புகையிரத ஊழியர்கள் மற்றும் புகையிரத இயந்திரங்களின் பற்றாக்குறையினால் பண்டிகைக் காலங்களில் மேலதிக புகையிரத சேவைகளை மேற்கொள்ள முடியாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, பாடசாலை விடுமுறை ஆரம்பமானதும், பதுளை, யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைக்கு (KKS) பல ரயில் சேவைகளை சேர்க்க திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் NJ இண்டிபோலகே தெரிவித்தார்.

இருப்பினும், ரயில் என்ஜின்கள், ரயில்வே காவலர்கள், என்ஜின் டிரைவர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையை திணைக்களம் எதிர்கொண்டுள்ளது. இதனால், பண்டிகைக் காலங்களில் கூடுதல் ரயில் சேவைகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இருந்த போதிலும், டிசம்பர் 24 ஆம் திகதி இரவு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை விசேட புகையிரதமொன்றும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரையில் மற்றுமொரு விசேட புகையிரதமும் சேவையில் ஈடுபடுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் பதுளைக்கு மற்றுமொரு விசேட ரயில் சேவையில் ஈடுபடவுள்ளது.

கொழும்பு-யாழ்ப்பாணம் ரயில் வாரத்தில் ஏழு நாட்களும் இயக்கப்படும் மற்றும் யாழ்தேவி விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியோடு புத்தாண்டில் கால் பதிக்கிறோம்!

மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த...

NPP இன் கொழும்பு மாநகர சபை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

கொழும்பு மாநகர சபை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 58 வாக்குகள் எதிராக...

ஜோஹான் பெர்னாண்டோ விளக்கமறியலில்

பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்...

களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு

களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலைக்குள் இன்று (31) காலை துப்பாக்கிச் சூட்டுச்...