Date:

மீண்டும் மன்னிப்பு கோரிய பேஸ்புக் நிறுவனம்

ஒருவாரக் காலப்பகுதியில் இரண்டு முறை பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் செயலிழந்தமைக்கு பேஸ்புக் நிறுவனம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளது.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தடையைப் போல, நேற்றைய தினமும் இரண்டு மணிநேர செயலிழப்பு ஏற்பட்டது.

இதனால், பேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் உள்ளிட்ட செயலிகளும் பாதிக்கப்பட்டன.

எனினும் இந்தக் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதாகவும், சேவைகள் வழமைக்கு திரும்பியதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை, பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் கிட்டத்தட்ட 6 மணித்தியாலங்கள் செயலிழந்தன.

இதனால் உலகளவில் சுமார் 3.5 பில்லியன் பயனர்கள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரிக்கு தடுப்புக்காவல்

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றில் சரணடைந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை...

(SJB) உறுப்பினர்கள் மீதான தடையை நீக்கியது (UNP)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான...

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியான செய்தி

2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல...

சுகயீன விடுமுறையில் குதித்த மின்சார சபை ஊழியர்கள்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறையை அறிவித்து,...