Date:

பொதுமக்கள் சகலருக்கும் அரசாங்க கொடுப்பன…

பொதுமக்கள் சகலருக்கும் அரசாங்கம் கொடுப்பனவுகளை வழங்குவதாக அரசாங்க இலச்சினையுடன் கூடிய செய்தியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றது.

இதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு factseekerஇற்கு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதை அடுத்து இது குறித்து ஆராயப்பட்டது.

இவ்வாறு பகிரப்படும் செய்தியில், ‘ஒவ்வொரு வீட்டிற்கும் 50 000 ரூபா உதவித் தொகை வழங்குவதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அந்தத் தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்குமாறு ஒரு இணைப்பும் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த இணைப்பை அணுகும்போது பின்வரும் உள்நுழைவு காட்டப்பட்டது.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் 100,000 ரூபாய் அரச உதவி வழங்கப்படும் என்று இன்னொரு பதிவும் பகிரப்படுகின்றது. அந்த பதிவிலும், இணைப்பு ஒன்று வழங்கப்பட்டு அதனை அணுகுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பகிரப்படும் செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் factseeker வினவிய போது, ​​இந்த பிரசுரங்கள் முற்றிலும் பொய்யானவை என்பதை அவர்களிடம் இருந்து உறுதிப்படுத்த முடிந்தது.

ஆகவே, சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த செய்திகள் தவறானவை என்பதை FactSeeker உறுதி செய்வதுடன், இவ்வாறான இணைப்புகளில் பொதுமக்கள் தங்களின் தகவல்களை வழங்க வேண்டாம் எனவும் வலியுறுத்துகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...