Date:

திருக்குமரன் நடேசனிடம் கையூட்டல் ஆணைக்குழு 4 மணித்தியால வாக்குமூலம் பதிவு

கையூட்டல் ஆணைக்குழுவுக்கு பிரவேசித்த முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசன், வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் குறித்த ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் உள்ள பிரபலங்கள், அரச தலைவர்கள் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளின் மறைமுக சொத்துகள் தொடர்பான தகவல்களை வெளியிட்ட பெண்டோரா ஆவணத்தில் திருக்குமரன் நடேசனின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தமை தொடர்பில் கையூட்டல் ஆணைக்குழு அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளது.

இன்றுகாலை 9 மணியளவில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு வருகைதந்த நடேசன் சுமார் 4 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

உலகளாவிய ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பெண்டோரா ஆவணத்தில் உள்ள இலங்கையர்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.

அதற்கமைய, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் இன்று முன்னிலையாகி நடேசன் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

மேற்படி பெண்டோரா ஆவணத்தில் முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் நடேசன் ஆகியோருக்கு வெளிநாட்டில் மறைமுக சொத்துகள் காணப்படுவதாகக் குற்றச்சாட்டு முன்னவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின்

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின் இவர். பெயர் சலீம் முஹ்சீன். பசி,...

முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் – சர்வதேசமயமாகப்பட வேண்டும் – ரவூப் ஹக்கீம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி. முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள்...

🕌 35வது தேசிய ஷுஹதாக்கள் தினம் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு..

1990ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி, காத்தான்குடியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த...

யோஷித மற்றும் டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது...