Date:

வழக்கை விசாரிக்க உத்தரவு

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்திருந்த வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோரின் கோரிக்கையை நிராகரித்த நீர்கொழும்பு மாவட்ட நீதவான் லலித் கன்னங்கர, அனைத்து வழக்குகளையும் விசாரிக்குமாறு புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்ட கட்டுவா பிட்டிய குண்டுவெடிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 182 நட்டஈடு வழக்குகள் தொடர்பில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தமது கட்சிக்காரர்கள் இருவரும் பொலிஸ் உத்தியோகத்தர்களாக இருப்பதால், பொலிஸ் விதிகளின் பிரகாரம் சம்பந்தப்பட்ட சம்பவம் இடம்பெற்று 3 மாதங்களுக்கு முன்னர் அவர்களுக்கு எதிராக எந்தவொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

வழக்குரைஞர்கள் முதற்கட்ட ஆட்சேபனையை சமர்ப்பித்ததோடு, குண்டுவெடிப்பு நடந்து மூன்று மாதங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் உரிய வழக்கை தாக்கல் செய்யாததால், தங்கள் வாடிக்கையாளர்களான காவல்துறை அதிகாரிகள் மீதான இழப்பீட்டு வழக்குகளை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார்.

இந்த பூர்வாங்க ஆட்சேபனையை முன் விசாரணையில் பூர்வாங்க சட்ட சிக்கலாக பரிசீலித்து தீர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373