Date:

புத்தளம், பொலவத்தை சந்தியில் எம்.பி வாகனத்தில் மோதி பெண் மரணம்

புத்தளம், பொலவத்தை சந்தியில் உள்ள  பாதசாரி கடவையில் நடந்து சென்ற யாசக  பெண் ஒருவர் மீது அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் மோதியதில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 65 – 70 க்கு இடையிப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் திங்கட்கிழமை (8) அன்று  கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஜீப்பில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் கஜேந்திர குமாரின்  சாரதியான ஹுன்னஸ்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய நபர்  கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தற்போதைய வானிலை காரணமாக டெங்கு அதிகரிக்கும் அபாயம்

நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக இலங்கை முழுவதும் நுளம்புகளின் அடர்த்தி...

சுகாதார அவசரநிலை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

தற்போதைய சீரற்ற வானிலையால் ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள்...

தங்கம் வாங்க தயங்கும் மக்கள்: விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையிலும் வேகமாக அதிகரித்துள்ளது. அதன்படி,...

வௌ்ள அபாய முன்னெச்சரிக்கை விடுப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய...