Date:

எதிர்க் கட்சியினர் வசம் கைமாறவுள்ள முக்கிய தலைமைப் பதவி

கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதனால் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப் ) குழுவின் தலைமைப் பதவி  அரசாங்கத்துக்கு தேவை. அதேநேரம் அரச கணக்கு குழுவின்  (கோபா ) தலைமை பதவி  எதிர்க்கட்சிக்கு வழங்கப்படுமென சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை (06)  பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் உறுப்பினர்களின்  எண்ணிக்கை தொடர்பில் ஏற்பட்ட  சர்ச்சையின்போதே  இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு உறுப்பினர்களின்   எண்ணிக்கையை  அதிகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் கேட்டாலும் தற்போதுள்ள எண்ணிக்கையில் ஓர் உறுப்பினரை மட்டும்  அதிகரிப்பதற்கு இணங்குகின்றோம் என்றார்.

எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி 12 கட்சிகள் இருப்பதால் பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் பிரதிநிதித்துவப்படுத்த எதிர்க்கட்சிகளில்  6 பேருக்கே இடமளிக்கப்பட்டிருக்கிறது.

அதில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி பிரதமகொறடா ஆகியோர் உத்தியோகபூர்வமாக அதில் இடம்பெறுகின்றனர்.எஞ்சிய 4பேரையும் நியமிப்பதிலேயே பிரச்சினை இருப்பதாக எதிர்க்கட்சி பிரதமகொறடா கயந்த கருணாதிலக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதற்கு சபை முதல்வர் பதிலளிக்கையில் , அனைத்து கட்சிகளையும் பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. அதனால் பாராளுமன்றத்தில் இருக்கும் ஏனைய முக்கியமான குழுக்களில்  அவர்களின் பிரதிநிதித்துவத்துக்கு இடமளிக்க முடியும்.

அந்த வகையில் அரச கணக்கு குழுவின் (கோபா ) தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்கு நாங்கள் தீரமானித்திருக்கிறோம். அது நீங்கள் கேட்டு நாங்கள் வழங்கவில்லை. அதனை நாங்கள் நியாயமான முறையிலே எதிர்கட்சிக்கு வழங்குவதற்கு தீரமானித்திருக்கிறோம். அந்த குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“ஹரக் கட்டா” கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

பூஸா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாளகுழுவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான “ஹரக் கட்டா”...

நேபாளத்தில் புதியவகை கொரோன தோற்றால் 35 பேர் பாதிப்பு!

நேபாள நாட்டில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்றால், 7...

செம்மணி மனித புதைகுழி விடயத்தில் அழுத்தம் கொடுப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன்...

ராகம, கந்தானை உள்ளிட்ட பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கை!

ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று (04) இரவு இராணுவம்...