Date:

மஹரகம வாகன விபத்து – ஒருவர் பலி!

மஹரகம பமுன்வ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிலியந்த பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சுபுன் சுலோகனா அகலங்க் எனவும் இவர் ஜனாதிபதி செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றியவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர புதிய வைத்தியசாலையிலிருந்து பமுன்வ நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, ஜீப் வாகன சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு கார்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் ஜீப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொப்பி அணிந்து தாடி வளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அகிம்சைவாதியா!

தொப்பி அணிந்து தாடிவளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அவர்கள்...

50000 இளைஞர்களுக்கு “Next Sri Lanka” திட்டத்தில் வேலைவாய்ப்பு!

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், பிற அமைச்சகங்களுடன் இணைந்து, 200,000 குறைந்த வருமானம்...

தங்கம் விலை பவுணுக்கு 4,000 ரூபாய் அதிகரித்தது

கடந்த இரு நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று (12) தங்க விலை 4,000...

வவுனியாவில் ஏற்பட்ட பதற்றம் : 5 பொலிஸ் அதிகாரிகளுக்கு காயம்

வவுனியா - கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கும் பிரதேச...