Date:

“எம்.பியாக நியமிக்காவிடில் தன்னுயிரை மாய்ப்பேன்”

தன்னை தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு நியமிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என ஐக்கிய மக்கள் சக்தியின்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன தெரிவித்துள்ளார்.

“நான் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் 40,000 க்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றேன். எனவே, என்னை தேசிய பட்டியலிலிருந்து நியமிக்க வேண்டும். நான் ஏற்கனவே கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பேசியுள்ளேன், அவர் எனது கோரிக்கைக்கு செவிசாய்ப்பார் என்று நான் நம்புகிறேன். என்னை சபைக்கு நியமிக்காவிட்டால் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்வேன்” என அமரசேன ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

தேசியப் பட்டியல் மூலம் தங்களை நியமிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வருவதால், கட்சித் தலைவர் ஆதரவற்ற நிலைக்கு ஆளாகியுள்ளார்.

கட்சித் தலைவரின் வாக்குறுதியின்படி தனக்கும் தேசியப் பட்டியலில் இடம் கிடைக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவும் தெரிவித்துள்ளார்.

“கண்டியில் இருந்து தேர்தலில் என்னை போட்டியிட வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன், கட்சித் தலைமை என்னை தேசிய பட்டியலிலிருந்து நியமிப்பதாக உறுதியளித்தது. எனவே, தேசியப் பட்டியலில் இருந்து நியமிக்கப்படுவதற்கு நான் தகுதியானவன்” என சுஜீவ சேனசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணில் விடுத்துள்ள அவசர கோரிக்கை

நாட்டின் எதிர்க்கட்சிகள் இந்த நேரத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மற்றும் ஜனநாயகத்தை...

ரணிலை விடுதலை செய்க: சொல்ஹெய்ம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை. தயவு...

வெல்லம்பிட்டியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு...

கொழும்பின் பிரதி பொலிஸ்மா அதிபர் கைது

கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே இன்று...