Date:

பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தினார் அர்ச்சுனா

பிரபாகரனை தனது கடவுள் என்று கூறி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு யாழ் மாவட்ட சுயேட்சை எம்.பி அர்ச்சுனா ராமநாதன் அஞ்சலி செலுத்தினார்.

நேரலை காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தனது தந்தை இலங்கை அரசாங்கத்தின் முன்னாள் பொலிஸ் அதிகாரி எனவும், அவர் 1987ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் பொலிஸில் இணைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

“எனது தந்தை இலங்கை அரசாங்கத்தின் பொலிஸ் அதிகாரி. அவர் நாட்டில் எல்லா இடங்களிலும் பணிபுரிந்தார். 1983 கலவரத்திற்குப் பிறகு யாழ்ப்பாணத்திற்குச் சென்று இனவெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் அரசாங்கத்திற்கு எதிராக அக்காலத்திலிருந்து விடுதலைப் பயணத்தைத் தொடங்கினார்,” என்று அவர் கூறினார்.

“நாங்கள் இனவாதிகள் அல்ல. நாங்கள் இலங்கைத் தமிழர்கள். இந்த மாதம் போரின்போது உயிரிழந்த உயிர்களை நினைவுகூர்கிறோம். நான் சிங்கள மக்களுக்கு எதிரானவன் அல்ல, எங்களைக் கொன்ற சிங்கள அரசுக்கு மட்டுமே எதிரானவன் என்று என் கடவுள் பிரபாகரன் கூறியுள்ளார்” என்று எம்.பி அர்ச்சுனா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போலி செய்திகளை பரப்புவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான...

“சிறையில் இம்ரான் உயிரோடு இருக்கிறார்”

​பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் அடிலா சிறை​யில் உயிருடன் இருக்​கிறார். அவரை...

வீடுகளைச் சுத்தம் செய்ய வீட்டுக்கு 10,000;விபரங்களுக்கு கிளிக் செய்யவும்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு, ஒரு வீட்டுக்கு 10,000 வழங்கப்படும்....

பேலியகொடை பாலத்திற்கு கீழ் தற்போதைய நிலை

தொடர்ச்சியான சீரற்ற வானிலைக்கு மத்தியில் போலியகொட பாலத்திற்கு அருகில் தற்போதைய நிலைமைகள்..