Date:

பெற்றோர் மறுத்ததால் தோழியுடன் குதித்த மாணவி

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவியொருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள  சம்பவம் சனிக்கிழமை ( 23)  பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கண்டி தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி தனது தோழியுடன் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளதுடன் தோழி காப்பாற்றப்பட்டு கரைக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் மற்றைய மாணவி நீரில் காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து, காணாமல்போன பாடசாலை மாணவியின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காப்பாற்றப்பட்ட தோழி சிகிச்சைக்காக தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவியின் காதல் உறவுக்குப் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததனால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாலேயே மாணவி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.   அவர் இன்று (22) காலை...

ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்கவுக்கு தங்கம்

தென் கொரியாவில் நடைபெற்றுவரும் எறிதல் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (22) நடைபெற்ற...

அகில விராஜ் இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை...

தேரடி வீதியை சுற்றி வந்த நல்லூரான்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் மஹோற்சவத்தின் 24ஆவது நாளான தேரடி...