Date:

’ரவியின் பெயர் அனுப்பப்பட்டது ரணிலுக்கு தெரியாது’

“புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்காக ரவி கருணாநாயக்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அறிவிக்கப்பட்டதன் பின்னரே தெரிவித்ததாக கூறப்படுவது பொய்யான செய்தி” என, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவர் மேலும் கூறுகையில்,

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்புவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எவ்வித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியால் முன்னிறுத்தப்படும் வேட்பாளருக்கு தேசிய பட்டியல் ஆசனம் ஒன்றை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாக கூறப்படும் கருத்தும் அடிப்படையற்றது என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனங்களை நிரப்புவது தொடர்பில் நவம்பர் 19ஆம் திகதியன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட வேண்டுமென ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக, அபேவர்தன மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரூ.18 கோடியை ஏப்பம் விட்ட வங்கி அதிகாரி கைது

அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரி ஒருவர், வங்கியின் தலைமை அலுவலகத்தில் நிதி...

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதல்

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது. தெற்கு சிரியாவில்...

அஞ்சல் திணைக்கள உதவி அத்தியட்சகராக பாத்திமா ஹஸ்னா

அஞ்சல் திணைக்களத்தில் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக கே. பாத்திமா ஹஸ்னா...

ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்’: பொருளாதாரத் தடை: நேட்டோ எச்சரிக்கை

ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும்...