Date:

கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கும் நேரம் திருத்தம்

நவம்பர் 21 ஆம் திகதி 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் முற்பகல் 11.30 மணிக்கு ஜனாதிபதி அனுர திஸாநாயக்க அரசாங்க கொள்கை அறிக்கையை சமர்பிப்பார் என பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

10ஆவது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு நவம்பர் 21ஆம் திகதி காலை 10:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், அன்றைய தினம் முற்பகல் 11:30 மணியளவில் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பிப்பார்.

நவம்பர் 21 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்பிப்பார் என பாராளுமன்றம் முன்னதாக அறிவித்தது.

அரசியலமைப்பின் உறுப்புரை 33(அ) பிரிவின்படி, பாராளுமன்றக் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் அரசாங்கக் கொள்கை அறிக்கையை சமர்ப்பிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. மேலும், அரசியலமைப்பின் உறுப்புரை 33 (ஆ) படி, ஜனாதிபதி பாராளுமன்றத்தின் சம்பிரதாய அமர்வுகளுக்கு தலைமை தாங்குவதற்கு உரிமையுடையவராவார்.

இந்த அமர்வின் போது, ​​அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை மற்றும் வரவிருக்கும் முன்முயற்சிகள் பற்றிய விரிவான விளக்கத்தை, கொள்கை அறிக்கையின் மூலம் ஜனாதிபதி பாராளுமன்றத்திலும் பொதுமக்களுக்கும் வழங்குவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள்...

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி; அதிஸ்டசாலியான நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி...

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...