Date:

சிறைச்சாலைக்குள் ’பொடி லெசி’இன் அலைபேசி மீட்பு

புஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொடி லசி என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்கவின் சிறை வளாகத்தில் இருந்து, அலைபேசி மற்றும் பல உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

பொடி லசி அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் சிறப்புப் பிரிவின் செல் எண் 42-ஐ அவசரமாக ஆய்வு செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று குறித்த இடத்திற்குச் சென்றுள்ளது.

இதன்போது, ​​பொடி லசி தனது உடமையில் வைத்திருந்த அலைபேசி மற்றும் துணைக்கருவிகளை  பின்புற ஜன்னல் வழியாக வீசியதாக, பொலிஸ்  விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

அதன்படி, அலைபேசி 1, சார்ஜர் 1, டேட்டா கேபிள், 01 ஹேண்ட் ஃப்ரீ உள்ளிட்ட உபகரணங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக தடைசெய்யப்பட்ட உபகரணங்கள் புஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்கும் மேஸ்ட்ரோ கேட்வே கேம்பஸ்…

60க்கும் மேற்பட்ட டிப்ளமோ பட்டங்களை வழங்கிய "மேஸ்ட்ரோ கேட்வே கேம்பஸின் பட்டமளிப்பு...

இலங்கையின் புதிய டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை

இலங்கையின் புதிய டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை (e-NIC) உருவாக்க இந்திய...

ஊழல் எதிர்ப்புக்கு ஜப்பான் நிதியுதவி

ஊழல் எதிர்ப்பு வழிமுறைகளை வலுப்படுத்துவதற்காக ஜப்பான் அரசு இலங்கைக்கு 2.5 மில்லியன்...

தே.ம.ச க்கும் இ.தொ.காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்வும், தேசிய...