Date:

ஹொங்கொங் சிக்சர்ஸ்- கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி!

ஹொங்கொங் சிக்சர்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 3 விக்கட்டுக்களால் வீழ்த்தி இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 6 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக மொஹமட் அக்லக் 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க மற்றும் தனஞ்சய லக்‌ஷான் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து 73 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பாக சந்துன் வீரக்கொடி 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்த வெற்றியின் ஊடாக 2024 ஹொங்கொங் சிக்சர்ஸ் தொடரின் சம்பியன் பட்டத்தை இலங்கை அணி 17 வருடங்களுக்கு பின்னர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானின் 200 இலக்குகளை 24 மணி நேரத்தில் தாக்கிய இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200 இற்கும் மேற்பட்ட...

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...