மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தென் மாகாணத்திலும், பன்னிப்பிட்டிய, ரத்மலானை, ஹொரணை, தெஹிவளை, மத்துகம ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் வழங்குவதில் தடையேற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.