Date:

CID-யில் முன்னிலையானார் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.

சர்ச்சைக்குரிய BMW கார் தொடர்பில் சட்டங்களை மீறியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து வாக்குமூலம் வழங்குமாறு அறிவிக்கப்பட்ட போதும், அவர் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் குருநாகல் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு தயார் என முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்திருந்த நிலையில், இன்று முன்னிலையாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யூடியூபர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவிப்பதா சிஸ்டம் சேன்ஞ்ச்?

நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாக முறையாக முன்னெடுக்கப்பட...

“ரணில் விக்கிரமசிங்கவை நெருங்க முடியாது, அவர்மீது கை வைக்க முடியாது”

“ வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைந்நாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார்....

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.   அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர்...

பொரலஸ்கமுவ துப்பாக்கிதாரி தப்பிச் சென்ற வாகனம் கண்டுபிடிப்பு

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் துப்பாக்கி சூடு நடத்தி இளைஞர் ஒருவரை...