Date:

செல்லுபடி காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

மோட்டார் வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீடிக்க போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி, 2021 ஏப்ரல் 1 ஆம் திகதி தொடக்கம் 2021 செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான குறிப்பிட்ட காலத்தில் காலாவதியாகும் அனைத்து அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேற்கண்ட காலாவதி திகதியிலிருந்து 12 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

2021 ஒக்டோபர் 1 தொடக்கம் 2022 மார்ச் 31 திகதி வரை காலாவதியாகும் அனைத்து அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேற்கண்ட காலாவதி திகதியிலிருந்து காலம் 06 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்கள், தாமதமாக புதுப்பிக்க விதிக்கப்படும் அபராதத்தை செலுத்தாமல் இந்த காலத்துக்கு பின்னர் தங்கள் அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்க முடியும்.

கெரோனா தொற்று காரணமாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மூடப்பட்டதால் சாரதி அனுமதிப் பத்திரம் பெற காத்திருந்தவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மட்டக்குளியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

மட்டக்குளிய சமித் பகுதியில் T-56 துப்பாக்கியை வைத்திருந்த மட்டக்குளியவைச் சேர்ந்த 36...

நாளை முதல் சில பகுதிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு ரயில் திணைக்களம் விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக...

அதிகரிக்கப்படும் சீமெந்து மூட்டையின் விலை?

50 கிலோ சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக...

மரைன் டிரைவ் வீதியோர உணவு விற்பனைநிலையங்கள் மீது நடவடிக்கை

மரைன் டிரைவில் இயங்கும் பல வீதியோர உணவு விற்பனை நிலையங்கள், சரியான...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373