Date:

ஆற்றில் நுரை படர்ந்த நீர் – மக்கள் அதிர்ச்சி

நுவரெலியா – செ.திவாகரன்

நுவரெலியாவில் ஆற்றில் அதிக நூரை பொங்கி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நுவரெலியா மீபிலிமான பகுதியில் இருந்து நானுஓயா வழியாக செல்லும் ஆற்றில் தொடர் மழை காரணமாக ருவான் எலியா, பிளாக்பூல் போன்ற பகுதிகளில் ஆற்றில் தேங்கியுள்ள நீரிலும் கரையோரங்களிலும் அத்துடன் ஆற்றில் இருந்து வெளியேறும் நீரிலும் அதிக இரசாயன நுரைகளுடன் செல்கிறது. குறித்த இரசாயன நுரைகளுடன் அதிக துர்நாற்றம் வீசுவதால் இப்பகுதி விவசாயிகளும் பொது மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நுவரெலியாவில் தொடர்ந்து பெய்யும் மழையுடன் காற்று பலமாக வீசியதால் ஆற்றுத்தண்ணீர் மீது படர்ந்திருந்த நுரை ஆங்காங்கே பறந்து செல்கிறது. இதனால் குறித்த ஆற்று நீர் மாசுபட்டு அதிக நூரையுடன் வெளியேறுவதாக நினைத்து சுவாச பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார தொழிற்சங்கங்களின் எச்சரிக்கை

மின்சார சபை ஊழியர்கள் தொடங்கிய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம்...

வெல்லவாயவில் மற்றுமொரு கோர விபத்து

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில், யாலபோவ டிப்போவிற்கு எதிரே இன்று...

ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள புதிய தீர்மானம்

ஆரம்பக் கட்ட கலந்துரையாடல்களின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்...

லான்சாவுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 2006ஆம்...