Date:

சிலிண்டரா? யானையா?: ஆராய்கிறது ஐ.தே.க

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில், ஐக்கிய தேசியக கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் கூட்டத்தில் ஆராயப்படுகின்றது.

எரிவாயு சிலிண்டர் அல்லது யானையை தெரிவு செய்து அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இணக்கம் காணப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர்  ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

செயற்குழு பரிசீலிக்கும் பிரேரணையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும்  ருவான் விஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மற்றும் பல விசேட கூட்டங்கள் முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்  ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றதுடன், இவ்விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்டத் தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்கள், முகாமையாளர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“ஹரக் கட்டா” கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

பூஸா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாளகுழுவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான “ஹரக் கட்டா”...

நேபாளத்தில் புதியவகை கொரோன தோற்றால் 35 பேர் பாதிப்பு!

நேபாள நாட்டில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்றால், 7...

செம்மணி மனித புதைகுழி விடயத்தில் அழுத்தம் கொடுப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன்...

ராகம, கந்தானை உள்ளிட்ட பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கை!

ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று (04) இரவு இராணுவம்...