Date:

சஜித்தை அநுர முறியடிப்பார்- ரணில் உறுதி

தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விஞ்சி இந்த வருட இறுதியில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக வருவார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்புகிறார்.

மஹியங்கனையில் நடைபெற்ற பேரணியொன்றில் உரையாற்றிய விக்ரமசிங்க, தனது முன்னாள் அரசியல் ஆதரவாளர் (சஜித்) எதிர்கட்சித் தலைவர் என்ற ரீதியில் தனது கடமைகளில் தவறிவிட்டார் என்றும், இதன் மூலம் SJB பிரதான எதிர்க்கட்சியாக தனது நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்ளத் தவறிவிடும் என்றும் கூறினார்.

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலும் எனது கட்சி பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. கடந்த காலத்தில் இருமுனைப் போர் மட்டுமே இருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சி சார்பில் ஒருவரும் ஆளும் கட்சி சார்பில் ஒருவரும் மட்டுமே பிரதான வேட்பாளர்களாக இருந்துள்ளனர். எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு எதிர்க்கட்சி வேட்பாளர்கள் இருப்பதால் அது இன்று மாறிவிட்டது” என்று விக்கிரமசிங்க கூறினார்.

“அவர்கள் அனுர மற்றும் சஜித். சஜித்தை அநுர முறியடிப்பார்”.இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவர்தான் முன்னணியில் இருப்பவர் என விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

4 ஊடகவிலாளர்கள் தியாகிகள் ஆகினர்

காசா நாசர் மருத்துவமனை மீது இன்று (25) திங்கட்கிழமை இஸ்ரேலிய தாக்குதலில்...

வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு

2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல்...

ரணிலை பார்வையிடவில்லை“ பிரதமர் விளக்கம்

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, திருமதி மைத்ரி விக்கிரமசிங்கவுடன் இணைந்து முன்னாள்...

முன்னாள் அமைச்சர்களின் பிணை கோரிக்கை விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சார்பில்...