Date:

நீர்கொழும்பு காதி நீதிவானுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது!

நீர்கொழும்பு காதி நீதிவானுக்கு
இலஞ்சம் வழங்க முற்பட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஆணைகுழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை கொழும்பு  நீதிமன்றில் ஆஜர் செய்தபோது எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
சிலாபத்தை சேர்ந்த 34 வயதுடைய  நபரே  இலஞ்சம் வழங்க முற்பட்டபோது கைது செய்யப்பட்டவராவார்.
சந்தேக நபர் நீர்கொழும்பு காதி நீதவான் எம்.எம். முஹாஜிரினின் வீட்டில்  அமைந்துள்ள அலுவலகத்துக்கு  வந்து, தான் தொடர்ந்துள்ள மனைவியுடனான விவாகரத்து வழக்கை விரைவில் முடித்து, விவகாரத்து  (தலாக்) வழங்குமாறு கூறி, 5000 ரூபா பணத்தை நீதிவானின் மேசையில் வைத்துள்ளார்.
சந்தேக நபர் இதற்கு முன்னர் இரண்டு தடவை இலஞ்சம் வழங்க முயற்சித்தபோது காதி நீதிவான் சந்தேக நபரை எச்சரித்து, அறிவுரை கூறி திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 13 ஆம் திகதி  சந்தேக நபர் மீண்டும் நீதவானின் அலுவலகத்துக்கு வந்து 5000 ரூபா பணத்தை நீதிவானின் மேசை இலாச்சியில்  வைத்துள்ளார். இதன்போது  இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் 14 ஆம் திகதி  கொழும்பு நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்ட போது , எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
காதி நீதிவான் எம்.எம். முஹாஜிரின் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நீர்கொழும்பு நகரில் பணியாற்றி வருகிறார்.  இவர் அக்குறணையை பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வாசிப்பிடமாகவும் கொண்டவராவார். தனது கடமைக்கு மேலதிகமாக கம்பஹா காதிநீதிமன்றத்தில் பதில் காதி நீதிவானாக இரண்டரை வருட காலம் பணியாற்றியுள்ளார். தற்போது புத்தளம் பதில் காதி நீதிவானாகவும் கடந்த ஐந்து மாதங்களாக பணியாற்றி வருகிறார்.
காதி நீதிவான் எம்.எம். முஹாஜிரின் கொழும்பு இஹ்ஸானியா அரபிக் கல்லூரியின் பழைய மாணவரும், அந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமாவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்

மியான்மரில், வெள்ளிக்கிழமை (18) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.57 மணியளவில் (இலங்கை...

கொட்டாஞ்சேனையில் தீ பரவல்

அதுகொட்டாஞ்சனை மக்கள் வங்கியில் மின்சாரம் வயர்கள் நெருப்பு எடுத்து தீ பிடித்தது...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ரிசாட் பதியுதீன் அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கை..!

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நிகழ்ந்த குண்டுத்...

யாழில் விரைவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!

தனது அரசாங்கத்தின் முதல் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373