பெண்கள் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தலை ஒழுங்குபடுத்தல் மற்றும் அவர்களுடைய தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 1956 ஆம் ஆண்டு 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தொழிலில் அமர்த்தல் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி முதல் சிறுவர்களைத் தொழிலுக்கு அமர்த்தலுக்கான குறைந்தபட்ச வயதெல்லை 16 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.
தொழில் உறவுகள் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரால் வெளியிடப்பட்ட தொழில் கட்டளைகளுக்கமைய,16-18 வயது வரையான இளைஞர்களுக்கு 51 ஆபத்தான தொழில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த தொழில்களில் ஈடுபடுத்தல் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 10 வருடங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த கட்டளைகளை மேலும் திருத்தியமைத்து வீட்டுப்பணி, ஒப்பனை அலங்காரத் தொழில்கள் மற்றும் கணினி மற்றும் ஏனைய இலத்திரனியல் உபகரணங்களுடனான தொழில் உள்ளிட்ட தொழில்களை சமகாலத்திற்கு ஏற்ற வகையில் ஆபத்தான மேலும் 20 தொழில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதற்கமைய, ஆபத்தான தொழில்களின் பட்டியலை 71 வரைக்கும் விரிவாக்கம் செய்து தயாரிக்கப்பட்டுள்ள கட்டளைகளை நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும், அதன்பின்னர் திருத்தப்பட்ட கட்டளையை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.